shadow

68 கிலோ ஜெயலலிதா இட்லி. சென்னை மெரினாவில் அலைமோதும் கூட்டம்

தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் சமாதிக்கு தினமும் லட்சக்கணக்கானோர் குவிந்து வந்து அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் இன்று காலை சென்னை மெரீனாவில் 68 கிலோ இட்லியால் ஜெயலலிதாவின் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரமாண்டமான இட்லியை பார்க்க அதிமுக தொண்டர்கள் அலைமோதி வந்து கொண்டிருக்கின்றனர். இன்று மாலை வரை இந்த இட்லி மெரீனாவில் வைக்கப்பட்டிருக்கும் என்றும் அதிமுகவினர் தெரிவித்தனர்

இந்த இட்லியை பார்த்த அதிமுக தொண்டர் ஒருவர் கூறியபோது ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுத்த அம்மா இன்று இட்லி வடிவில் தோன்றுவதாக கூறினார்.,

Leave a Reply