இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையா?
இந்தோனேசியா நாட்டின் கிழக்கு பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 6.1 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம், சேரம் கடல் பகுதியை ஒட்டியுள்ள மலுக்கு மாகாணத்தின் தலைநகரான அம்போன் நகரின் வடகிழக்கே சுமார் 119 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 11.9 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிர்ப்பலி மற்றும் சேதாரங்கள் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.