shadow

“56,000 ஐ.டி ஊழியர்கள் வேலை பறிபோகும் அபாயம்” : என்னதான் காரணம்?

இந்தியாவைச் சேர்ந்த 7 முன்னணி ஐ.டி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த 56,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளன.

இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களாக கருதப்படும் இன்போசிஸ், விப்ரோ,டெக் மகேந்திரா,காக்னிசண்ட்,டி.எக்ஸ்.சி டெல்னாலஜிஸ், கேப் ஜெமினி ஆகிய நிறுவனங்களில் சுமார் 1.24 மில்லியன் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 4.5 சதவீத ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப அந்த நிறுவனங்கள் தற்போது முடிவெடுத்துள்ளன. அதாவது கிட்டத்தட்ட 56,000 பேருக்கு லே ஆஃப் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டி.எக்ஸ்.சி நிறுவனம் தங்களிடம் வேலை பார்க்கக் கூடிய 1,70,000 ஊழியர்களில் 10,000 பேருக்கு லே ஆஃப் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு லே ஆஃப் கொடுக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை விட இரு மடங்காகும். லே ஆஃப் கொடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு பதிலாக, பிரஷர்ஸ் எனப்படும் புதிய, சம்பளம் குறைவாக பெறக் கூடிய பொறியியல் பட்டதாரிகள் வேலைக்கு எடுக்கப்பட உள்ளனர்.
இந்த வேலை நீக்க நடவடிக்கையின் முதல் கட்டமாக, லே ஆஃப் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ள ஊழியர்கள் ”பக்கெட் 4 ” என்ற பெயரில் தரம் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் உயர் பதவிகளில் உள்ள 3000 மேலாளர்களும் அடக்கம்.

ஆனால் இந்த வேலை நீக்க நடவடிக்கைகள் என்பது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடியது எனவும் பெர்பார்மென்ஸ் அடிப்படையில் வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் மாறும் எனவும் ஐடி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் முன்னேறி வரும் தொழில் நுட்பம் மற்றும் வியாபார நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்ள, இந்த லே ஆஃப் நடவடிக்கைகள் தேவைப்படுகிறது என இந்திய ஐ.டி நிறுவனங்கள் காரணம் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைச் சேர்ந்த 7 முன்னணி ஐ.டி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த 56,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளன.

இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களாக கருதப்படும் இன்போசிஸ், விப்ரோ,டெக் மகேந்திரா,காக்னிசண்ட்,டி.எக்ஸ்.சி டெல்னாலஜிஸ், கேப் ஜெமினி ஆகிய நிறுவனங்களில் சுமார் 1.24 மில்லியன் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 4.5 சதவீத ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப அந்த நிறுவனங்கள் தற்போது முடிவெடுத்துள்ளன. அதாவது கிட்டத்தட்ட 56,000 பேருக்கு லே ஆஃப் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டி.எக்ஸ்.சி நிறுவனம் தங்களிடம் வேலை பார்க்கக் கூடிய 1,70,000 ஊழியர்களில் 10,000 பேருக்கு லே ஆஃப் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு லே ஆஃப் கொடுக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை விட இரு மடங்காகும். லே ஆஃப் கொடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு பதிலாக, பிரஷர்ஸ் எனப்படும் புதிய, சம்பளம் குறைவாக பெறக் கூடிய பொறியியல் பட்டதாரிகள் வேலைக்கு எடுக்கப்பட உள்ளனர்.
இந்த வேலை நீக்க நடவடிக்கையின் முதல் கட்டமாக, லே ஆஃப் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ள ஊழியர்கள் ”பக்கெட் 4 ” என்ற பெயரில் தரம் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் உயர் பதவிகளில் உள்ள 3000 மேலாளர்களும் அடக்கம்.

ஆனால் இந்த வேலை நீக்க நடவடிக்கைகள் என்பது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடியது எனவும் பெர்பார்மென்ஸ் அடிப்படையில் வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் மாறும் எனவும் ஐடி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் முன்னேறி வரும் தொழில் நுட்பம் மற்றும் வியாபார நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்ள, இந்த லே ஆஃப் நடவடிக்கைகள் தேவைப்படுகிறது என இந்திய ஐ.டி நிறுவனங்கள் காரணம் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply