500 ரன்களை நெருங்கிய இந்தியா! டிக்ளேர் செய்யுமா?
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சற்றுமுன் வரை 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 491 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் 88 ரன்களுடனும் ஜடேஜா 25 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
முன்னதாக புஜாரா 193 ரன்கள் எடுத்து 7 ரன்களில் இரட்டை சதத்தை தவறவிட்டார். அவருடைய விக்கெட்டை லியான் கைப்பற்றினார்.
இந்திய அணியின் ஸ்கோர் 500ஐ நெருங்கிவிட்ட நிலையில் ரிஷ்ப் பண்ட் சதம் அடித்ததும் டிக்ளேர் செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.