இன்று ஒரே நாளில் 50 பேர்களுக்கு கொரோனா: 48 பேர் டெல்லியில் இருந்து திரும்பியவர்கள்

தமிழகத்தில் தினமும் சுமார் 50 பேர்களுக்கும் கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 50 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ளது என்பதும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேர்களில் 48 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் என்றும் சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply