5 மணி நேர விசாரணை முடிந்தது: வீடு திரும்பினார் விவேக்
ஜெயா டிவியின் மேலாண்மை இயக்குனர் விவேக்கை வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மாலை 5 மணி அளவில் விசாரணைக்காக அழைத்து சென்ற நிலையில் ஐந்து மணி நேரம் தீவிர விசாரணைக்கு பின்னர் அவர் நேற்றிரவு பத்து மணி அளவில் வீடு திரும்பினார்.
வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 9ஆம்தேதி முதல் விவேக் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவர் விளக்கம் அளிக்கவே வருமான வரித்துறை அதிகாரிகள் முன் ஆஜரானதாக தகவல்கள் வெளிவந்தது.
இந்த விசாரணையின் முடிவில் விவேக் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இது வெறும் வதந்தி என்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வருமான வரித்துறையினர் என்னென்ன கேள்வி கேட்டனர், அதற்கு விவேக் என்ன விளக்கம் அளித்தார் என்பது குறித்து விவேக் தெரிவிக்க மறுத்துவிட்டார். வருமான வரித்துறை அதிகாரிகளும் இதுகுறித்து தகவல் தெரிவிக்காததால் விசாரணையின் விபரம் தெரியவில்லை
Leave a Reply
You must be logged in to post a comment.