5 மாநில தேர்தலுடன் 20 தொகுதிகளின் தேர்தல்: திருமாவளவன்
வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தலுடன் இணைத்து தமிழகத்தில் காலியாகவுள்ள 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இன்று 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு குறித்து திருமாவளவன் கருத்து கூறியபோது, ’18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இருப்பினும் 20 தொகுதிகளுக்கும் உடனே இடைத்தேர்தலை நடத்த வேண்டும். 5 மாநில சட்டப்பேரவை தேர்தலோடு 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என திருமாவளவன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
திருமாவளவன் மட்டுமின்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் இந்த கருத்தை தேர்தல் கமிஷனுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.