இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட்: பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் தற்போது டெஸ்ட் தொடர் போட்டிகளில் விளையாடி வருகின்றன. இதுவரை முடிந்துள்ள மூன்று போட்டிகளில் இந்தியா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளிடையிலான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியை காண பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச டிக்கெட்கள் வழங்கப்படவுள்ளது. இந்த செய்தியை மும்பை கிரிக்கெட் சங்கம் உறுதி செய்துள்ளது.
போட்டியை காண பள்ளி, கல்லூரி முதல்வர்களின் அனுமதி கடிதத்துடன் வரும் மாணவர்களுக்கு இலவச அனுமதி உண்டு. ஆனால் ஒரு கல்வி நிறுவனத்துக்கு அதிகபட்சம் 15 இலவச பாஸ்கள் வழங்கப்படும் என்றும் மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.