பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 41 மாணவ- மாணவிகள் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை செய்துள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதினார்கள். இந்த தேர்வுக்காண முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு டி.பி.ஐ. வளாகத்தில் அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது.
இந்த முடிவுகளின்படி 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 41 மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர். இரண்டாம் இடத்தை 498 மதிப்பெண்கள் பெற்று 192 மாணவிகளும், 497 மதிப்பெண்கள் எடுத்து 540 மாணவர்கள் மூன்றாம் இடத்தை பிடித்து உள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.