shadow

400 உடல்களை ஒரே புதைக்குழியில் புதைத்த ஐ.எஸ் இயக்கத்தினர்

ஈராக் நாட்டில் ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த நகரங்களில் ஒன்றான ஹவிஜா நகரில் ஒரே புதைக்குழியில் 400 பேர்களை ஐஎஸ் இயக்கத்தினர் புதைத்த திடுக்கிடும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது

ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் இருந்து 240 கிமீ தூரமுள்ள ஹவிஜா நகர் சமீபத்தில் ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை அடைந்தது. இந்த நகரில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைகுழி ஒன்றில் சுமார் 400 உடல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சவக்குழியில் புதைக்கப்பட்ட உடல்களில் சில சாதாரண உடையுடனும், சில ஐ.எஸ். பயங்கரவாதிகள் மரண தண்டனை விதிக்கிறபோது அணிவிக்கிற உடையுடனும் (ஐம்ப்சூட்) காணப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply