shadow

40 தொகுதிகளிலும் நோட்டாவை முந்துவாரா? ஜெயகுமார் கிண்டல்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க ஓரிரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். இந்த நிலையில் நேற்று திடீரெனா தனது கட்சி தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.

தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவும், மாநில கட்சிகளான அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில் கட்சி ஆரம்பித்த ஒரே ஆண்டில் தனித்து போட்டியிடும் முடிவை கமல் எடுத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது

தனித்து போட்டியிட்டு தனது பலத்தை அறிய கமல் இந்த முடிவை எடுத்துள்ளாரா? அல்லது கமல் கட்சியை எந்த கூட்டணியும் சேர்த்து கொள்ளவில்லையா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த முடிவு குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், ‘கமல் கட்சி நோட்டாவை முந்துவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Leave a Reply