சென்னை வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து. 4 பேர் பரிதாப பலி
சென்னை வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களிலும் தீ பரவி அங்கிருந்து அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது.
இந்த தகவல் குறித்து தகவல் அறிந்து உடனடியாக தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அனைவரும் உறங்கி கொண்டிருந்ததால் அவர்களை வெளியேற்றும் பணியில் தாமதம் ஏற்பட்டது. மேலும் தீவிபத்து காரணமாக அதிகப்படியான புகைமூட்டம் இருந்ததால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மீனாட்சி, சஞ்சய், செந்தில், சந்தியா ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயமடைந்த 5 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்தில் 20 இருசக்கர வாகனங்கள் கருகின. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து போராடி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.