4-வது மாடியில் இருந்து தவறி கீழே விழ போன குழந்தையை நொடி பொழுதில் காப்பாற்றிய தாய்

கொலம்பியா நாட்டில் 4-வது மாடியில் இருந்து தவறி கீழே விழ போன தனது குழந்தையை நொடி பொழுதில் காப்பாற்றிய தாய் குறித்த வீடியோ ஒன்று சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது

கொலம்பியா நாட்டில் ஒரு தாய் தனது குழந்தையின் கையை பிடித்து கொண்டு நான்காவது மாடியில் நடந்து சென்று கொண்டிருக்கின்றார். அப்போது தாயின் கையில் இருந்து விடுபட்ட குழந்தை வேடிக்கை பார்த்தபோது திடீரென தவறி கீழே விழப்போனது

இதனை பார்த்த அந்த குழந்தையின் தாய், மின்னல் வேகத்தில் குழந்தையின் காலை பிடித்து கொண்டார். அதன்பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் அந்த குழந்தை எந்தவித மாயமும் இன்றி மீட்கப்பட்டது. இந்த வீடியோவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது

Leave a Reply