உடந்தையாக இருந்த 22 வயது காதலன்

ஹைதராபாத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவரும் 22 வயது இளைஞர் ஒருவரும் சேர்ந்து 20 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டு

ஹைதராபாத்தில் உள்ள 80 வயது முதியவர் ஒருவருக்கு அரபு நாட்டில் ஏற்கனவே நான்கு மனைவிகள் உள்ளனர்

இந்த நிலையில் சமீபத்தில் இந்தியா வந்த அந்த முதியவர் தன்னுடைய உறவினரான வாலிபரின் காதலியை தனது வீட்டுக்கு அழைத்து வந்து, இருவருக்கும் மறுநாள் திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதியளித்தார்

காதலரின் உறவினர் என்பதால் அவரை நம்பி அந்த வீட்டில் அன்றைய இரவு அந்த இளம்பெண் தங்கினார். இந்த நிலையில் சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்த அந்த 80 வயது முதியவர் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதற்கு உடந்தையாக அந்த பெண்ணின் காதலர் இருந்ததாகவும் அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது.

தற்போது பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்ததையடுத்து 80 வயது முதியவர் மற்றும்ன் 22 வயது காதலர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Leave a Reply