4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு
திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடந்த 22ஆம் தேதி இந்த நான்கு தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையவுள்ளது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யுமாறு தேமுதிக தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.