4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு சரத்குமார் ஆதரவு

திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை அரசியல் கட்சிகள் செய்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்த சரத்குமார் கட்சி தற்போது 4 தொகுதி இடைத்தேர்தலிலும் ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது

இதனையடுத்து அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணிகள் மேற்கொள்ள சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பொறுப்பாளர்களை நியமனம் செய்து சரத்குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்

Leave a Reply