shadow

4வது ஒருநாள் போட்டி: 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி இன்று நடைபெற்று வரும் 4வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

டாஸ் வென்று முதலில் நியூசிலாந்து அணி பந்துவீசிய நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டை பறிகொடுத்ததால் 30.5 ஓவர்களில் இந்தியா 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சாஹல் 18 ரன்களும், குல்தீப் யாதவ் 15 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 16 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து பந்துவீச்சாளர் பவுல்ட் 5 விக்கெட்டுக்களையும், கிராந்தோம் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்

இந்த நிலையில் 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடி வரும் நியூசிலாந்து அணி சற்றுமுன் வரை 2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கூ 23 ரன்கள் எடுத்துள்ளது. குப்தில் 14 ரன்கள் எடுத்து புவனேஷ்குமார் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

Leave a Reply