38வது மாவட்டம் குறித்த அறிவிப்பு: பரபரப்பு தகவல்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி நாகை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை என்ற புதிய மாவட்டம் உருவாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார் இது தமிழகத்தின் 38-வது மாவட்டமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

நிர்வாக வசதிக்காக இந்த மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது என்றும், இது மயிலாடுதுறை மக்களின் நீண்டகால கோரிக்கை என்றும் முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.

புதிய மாவட்டம் அரசாணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு மயிலாடுதுறை மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply