கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ். முதல்வர் அறிவிப்பு
மாணவர்கள், இளைஞர்க நடத்திய ஜல்லிக்கட்டு புரட்சி போரட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த போராட்டத்திற்கு ஏற்பட்ட திருஷ்டியாக கடைசி தினத்தில் வன்முறைகள் வெடித்தது. மாணவர்கள் போர்வையில் சமூக விரோதிகள் போராட்டக்களத்தில் புகுந்ததால் வன்முறை வெடித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த வன்முறையின்போது 36 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 21 பேர் சென்னையை சேர்ந்த மாணவர்கள் என்பதும் 15 பேர் தமிழகத்தின் மற்ற பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கைதான மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும், அவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தன. எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை பரிவுடன் ஏற்றுக்கொண்ட முதல்வர் ஓபிஎஸ் இன்று சட்டமன்றத்தில் 36 மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப்பெறப்படும் என்று அறிவித்தார். முதவரின் அறிவிப்புக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.