கொரோனா எதிரொலி:
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் வறுமை நீடித்து வரும் நிலையில் தற்போது பிரபல வங்கி 35 ஆயிரம் ஊழியர்களை திடீரென நீக்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இங்கிலாந்தின் பிரபலமான வங்கியான ஹெ.எஸ்.பி.சி என்ற வங்கி உலகம் முழுவதும் கிளைகளை கொண்டு நல்ல லாபத்தில் இயங்கி வந்தது. ஆனால் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால் பெரும் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து செலவுகளை குறைக்கும் வகையில் 35,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது
உலகம் முழுவதும் உள்ள 2 லட்சத்து 35 ஆயிரம் ஊழியர்களுக்கு இதுகுறித்து குறிப்பு ஆணை அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. திடீரென 35,000 பேர்கள் வேலை இழக்க நேரிடுவதால் அவர்களது எதிர்காலம் என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.