shadow

மோடி செய்யாததை செய்ய முயற்சிக்கும் நைஜீரியா அதிபர்

பிரதமர் மோடி, வெளிநாட்டில் உள்ள கருப்புப்பணத்தை கைப்பற்றி ஒவ்வொரு இந்தியனுக்கும் பகிர்ந்து தருவேன் என்று கடந்த தேர்தலின்போது கூறியிருந்தார். ஆனால் தற்போது அவருடைய அமைச்சர்கள் சுவிஸ் வங்கியில் இருப்பது இந்தியர்களின் கருப்புப்பணம் அல்ல, மூலதனம் என்று கூறுகின்றார்

இந்த நிலையில் நைஜீரியாவில், முன்னாள் அதிபர் பதுக்கி வைத்த கறுப்பு பணத்தை, சுவிஸ் வங்கியிலிருந்து மீட்டு, அதை, நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்க, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில், 1993 முதல், 1998 வரை, அதிபராக இருந்தவர், அபசா. இவர், திடீர் மாரடைப்பால், 1998ல் உயிரிழந்தார். தன் பதவிக் காலத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணத்தை பதுக்கிய அபசா, அதை, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கியில், ‘டிபாசிட்’ செய்தார் .இந்த நிலையில், நைஜீரிய அதிபர், முகம்மது புஹாரி, கறுப்பு பணத்தை மீட்டு, நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்க திட்டமிட்டுள்ளார்.

கடந்த, 2015ல் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போதே, இந்த வாக்குறுதியை அவர் அளித்துஇருந்தார். இதற்காக, சுவிஸ் வங்கி அதிகாரிகளுடன், நைஜீரிய அரசு பேச்சு நடத்திஉள்ளது. உலக வங்கி மேற்பார்வையில், முதல்கட்டமாக, 2,000 கோடி ரூபாய், நைஜீரிய அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதை, அந்நாட்டில் வசிக்கும், மூன்று லட்சம் குடும்பங்களுக்கு, சமமாக பிரித்தளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Leave a Reply