டுவிட்டர் நிறுவனத்தின் 300 ஊழியர்கள் நீக்கமா?
சமுக வலைத்தளங்களில் ஃபேஸ்புக்கை அடுத்து நம்பர் 2 இடத்தில் டுவிட்டர் இருந்தபோதிலும் இந்நிறுவனம் வருடந்தோறும் சுமார் 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செலவுகளை குறைக்க கடந்த ஆண்டு 336 ஊழியர்களை நீக்கம் செய்த நிலையில் இந்த ஆண்டும் சுமார் 300 ஊழியர்களை நிக்க டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அந்நிறுவன ஊழியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனாலும் ஊழியர்களின் வேலை நீக்கம் குறித்த தகவலை டுவிட்டர் நிறுவனம் மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் கடந்த சில ஆண்டுகளாக இந்நிறுவனத்தை விற்க முயற்சி செய்து வருகின்ற போதிலும், டுவிட்டர் எதிர்பார்க்கும் விலையை கொடுக்க மற்ற நிறுவனங்கள் தயங்கி வருவதால் பேரம் முடியாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.