லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த வாரம் மும்பையில் உள்ள ஒரு மிகப்பெரிய மைதானத்தில் 500 கார்களுடன் ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதில் முப்பது கார்கள் உடைந்து நொறுங்குகிறது. இந்த சண்டைக்காட்சிகளை 10 நாட்களில் சுமர் மூன்று ஸ்டண்ட் குழுக்களின் உதவியுடன் படமாக்கப்பட உள்ளது.
500 கார்களுக்கு இடையில் மாட்டிக்கொண்ட சமந்தாவை சூர்யா, அதிரடியாக காப்பாற்றுவது போன்று காட்சிகள் படமாக்கப்படுகிறது.
ஹாலிவுட் படத்திற்கு இணையாக சேஸிங் காட்சிகளூம், கார்கள் ஒன்றோடொன்று மோதும் காட்சிகளையும் படமாக்க லிங்குசாமி முடிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் சூர்யா இரண்டு வேடங்களிலும், அவருக்கு ஜோடியாக சமந்தா மற்றும் பாலிவுட்டின் முன்னணி நடிகை ஒருவரும் நடிக்கின்றனர்.
யுவன்ஷங்கர் ராஜா இசையில் லிங்குசாமி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 70% முடிந்துவிட்டதாகவும், வரும் ஆகஸ்ட் 15, இந்திய சுதந்திர தினத்தில் அஞ்சான் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு உறுதிய்ளித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.