shadow

தீபா வீட்டில் இருந்து தப்பி ஓடிய போலி அதிகாரியை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைப்பு

தீபா வீட்டில் வருமான வரிசோதனை செய்வது போல் நடித்து போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய போலி அதிகாரியை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

தேனாம்பேட்டை, தியாகராயநகர், வடபழனி உதவி ஆணையர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மூன்று தனிப்படைகள் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்தவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த நபரின் புகைப்படத்தை வைத்து ரயில் நிலையங்களில் போலி அதிகாரியின் புகைப்படங்களை கொடுத்து தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும், அந்த நபர் விரைவில் பிடிபடுவார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply