டெல்லி முன்னாள் முதல்வர் மகளை தாக்க ரெளடிகளை அனுப்பிய மருமகன். அதிர்ச்சி தகவல்
டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகள் லத்திகாவை அவரது மருமகனே ரெளடிகள் உதவியால் தாக்க முயன்ற சம்பவத்தில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் ஒருசிலரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகள் லத்திகாவும், மருமகன் இம்ரானுக்கும் சமீபத்தில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக லத்திகா அளித்த புகாரின்பேரில் இம்ரானை போலீஸார் கைது செய்தனர்.
இதற்கு பழிவாங்கும் வகையில் மனைவி லத்திகாவை தாக்க ரெளடிகளின் உதவியால் இம்ரான் முயன்றதாகவும், இதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட லத்திகா போலீஸில் புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் லத்திகாவை தாக்க வந்த ரெளடிகளை போலீசார் சுற்றி வளைத்தனர். எனினும் 3 பேர் மட்டுமே பிடிபட்டதாகவும் மீதிபேர்களை போலீசார் தேடி வருவதாகவும் டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Leave a Reply
You must be logged in to post a comment.