ஒவ்வொரு வருடம் வைகுண்ட ஏகாதேசி திருநாள் ஸ்ரீரங்கத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். அன்றைய தினத்தின் ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்படுவதால் தமிழகம் முழுவதும் இருந்து பெருவாரியான பெருமாள் பக்தர்கள் வருகை புரிவார்கள். அவர்களுடைய வசதிக்காக வரும் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீரங்கத்தில் நிற்கும் என தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் எண் 12635, ஸ்ரீரங்கத்திற்கு மாலை 5.49 மணிக்கு வந்து ஒரு நிமிடம் நின்று 5.50 கிளம்பிச் செல்லும்,

அதேபோல் மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வரும் வண்டி எண் 12636 என்ற வைகை எக்ஸ்பிரஸ் காலை 9,17 மணிக்கு ஸ்ரீரங்கம் வந்து ஒரு நிமிடம் நின்று 9.18 க்கு புறப்பட்டு செல்லும்.

பக்தர்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply