3 நோயாளிகள் மரணத்திற்கு மின் தடை காரணமா? திடுக்கிடும் தகவல்

மதுரை அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகள் மின் தடை காரணமாக மரணம் அடைந்துவிட்டதாக செய்திகள் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், மதுரை அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகளும் மின்சார தடைக்கு முன்னதாகவே மாரடைப்பால் உயிரிழந்தனர் என்றும், மின் தடையால் செயற்கை சுவாசம் தடைபட்டு 3 பேரும் உயிரிழக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்த விளக்கத்தால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சமாதானம் ஆகவில்லை என்பதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply