3 நாளில் சவரனுக்கு ரூ.1000 உயர்வு: தங்கம் விலை உயர காரணம் என்ன?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக விலை உயர்ந்து கொண்டே இருந்த நிலையில் தற்போது கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரன் ஒன்றுக்கு ரூ.1000க்கும் மேல் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. 

ரூ.26 ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை உயர காரணம் என்ன என்பது குறித்து  மெட்ராஸ் வைரம் மற்றும் தங்க வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி அவர்கள் கூறியபோது, ‘நேற்று முன் தினம் அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இருப்புத்தொகைக்கான வட்டி விகிதம் உயர்த்த கூடாது’ என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதேபோல் நேற்று அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஈரான் எல்லையில் பறந்தபோது அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது

இந்த இரண்டு காரணங்களால் தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை ரூ.30 ஆயிரம் வரை உயர வாய்ப்பு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply