3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தயார்! தலைமை தேர்தல் அதிகாரி

திருப்பரங்குன்றம் தேர்தல் குறித்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதால் அந்த தொகுதியில் தேர்தல் நடத்த எந்தவித பிரச்சனையும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில் திருப்பரங்குன்றம் உள்பட மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தயார் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாஹூ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் எப்போது தேர்தல் அறிவித்தாலும் நடத்துவதற்கு தயார் என்று தெரிவித்தார்.

முன்னதாக நீதிமன்ற வழக்கை காட்டி 18 தொகுதிகளுக்கு மட்டுமே வரும் ஏப்ரல் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply