3 மாணவர்கள் கைது எதிரொலி: கல்லூரி முதல்வர்களுக்கு சிபிசிஐடி சம்மன்
நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் ஏற்கனவே உதித் சூர்யாவும் அவருடைய தந்தையும் கைது செய்யப்பட்டதோடு, மேலும் மூன்று மாணவர்களும் அவர்களது தந்தைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்கள் படித்த 3 தனியார் மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் அனுப்பப்பட்டுள்ள 3 தனியார் மருத்துவ கல்லூரி முதல்வர்களும் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.