shadow

3 பேர் விடுதலையால் அதிர்ச்சி: உயிரிழந்த மாணவியின் தந்தை பேட்டி

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேரை விடுதலை செய்தது அதிர்ச்சியளிப்பதாக தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் உயிரிழந்த மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி நாமக்கல்லில் பேட்டி அளித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாமல் 3 பேரையும் விடுதலை செய்தது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3 பேர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவிற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்ததால் இன்று மூவரும் அடைந்த நிலையில் மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply