3வது முறையாக கணவன் – மனைவியாக நடிக்கும் சரத்குமார்-ராதிகா
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான சரத்குமார்-ராதிகா ஏற்கனவே நம்ம அண்ணாச்சி, சூர்ய வம்சம் ஆகிய இரு படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது 3வது முறையாக மணிரத்னம் கதை திரைக்கதை எழுதிய படம் ஒன்றில் கணவன், மனைவியாக நடிக்கவுள்ளனர். இந்த படத்தை மணிரத்னம் உதவியாளர் தனா இயக்கவுள்ளார்.
விக்ரம்பிரபு, மடோனா செபஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, வரும் ஏப்ரல் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் அதன் பின்னர் தொழில்நுட்ப பணிகள் முடிந்து வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
விக்ரம்பிரபு, சரத்குமார் ஆகியோர் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளதால் இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.