3வது டெஸ்ட்: 104 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்து 0-2 என்ற கணக்கில் பின்னடைவில் உள்ளது.
இந்த நிலையில் இன்று நாட்டிங்காம் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன், இந்தியாவை பேட்டிங் செய்யும்படி கோரினார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி சற்றுமுன் வரை 32.4 ஓவர்களில் 104 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்துள்ளது.
தவான் 35 ரன்களிலும், ராகுல் 23 ரன்களிலும், புஜாரா 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கோஹ்லி 12 ரன்களும், ரஹானே 13 ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர். இந்த டெஸ்ட் போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்தார் டெஸ்ட் தொடரை இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.