shadow

9தமிழகம் முழுவதும் தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தேர்தலுக்கு பின்னர் தினமும் இரண்டு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மின்சார வாரிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

தற்போது தினமும் 1500 மெகாவாட் முதல் 2500 மெகாவாட் வரை மின்சார பற்றாக்குறை இருந்து வருகிறது. மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வரவேண்டிய மின்சாரம் சரியாக வருவதில்லை. இந்நிஅலியில் மேட்டூரில் இரண்டு மின் உற்பத்தி மையங்களில் பழுது ஏற்பட்டு அதை சரிசெய்யும் பணிகள் நடந்து வருகிறது.

எனவே மின் பற்றாக்குறையை சரிப்படுத்த சென்னையில் தேர்தலுக்கு பின்னர்  தினமும் இரண்டு மணிநேரம் மின் தடை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் இன்னும் மின்சார அதிகார்களால் உறுதிப்படுத்தப்படவில்லை.

Leave a Reply