shadow

நியூசிலாந்து அணிக்கு 282 ரன்கள் இலக்கு. தென்னாப்பிரிக்கா அபாரம்.
newzeland
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்று வரும் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 38 ஓவர்களில் 216 ரன்கள் அடித்த நிலையில் மழை குறுக்கிட்டது. அதன்பின்னர் ஆட்டம் 43 ஓவராக குறைக்கப்பட்டது. மீண்டும் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணியினர் 43 ஓவர்கள் முடிவில் 281 ரன்கள் எடுத்தனர். டிபிளஸ்ஸிஸ் 82 ரன்களும், டிவில்லியர்ஸ் 65 ரன்களும், மில்லர் 49 ரன்களும் எடுத்தனர்.

282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியுசிலாந்து அணி ஆடி வருகிறது. சற்று முன்வரை அந்த அணி 12 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 104 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 194 ரன்களை 31 ஓவர்களில் அடிக்க வேண்டும். ரசிகர்கள் மிக ஆவலுடன் இந்த ஆட்டத்தின் முடிவை எதிர்நோக்கி உள்ளனர்.

Leave a Reply