28 வயது இளைஞருடன் கள்ளக்காதல்: 45 வயது மனைவியை வெட்டிய கணவர்

28 வயது இளைஞரும் கள்ளக்காதலில் ஈடுபட்ட 45 வயது மனைவியை அந்த பெண்ணின் கணவர் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தூத்துக்குடி அருகே சண்முகம், மாரியம்மாள் தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மாரியம்மாவுக்கும் ராமமூர்த்தி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதனை கண்டுபிடித்த சண்முகம், மனைவியை கண்டித்தும் அவர் தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டதாக தெரிகிறது

இந்த நிலையில் நேற்றிரவு சண்முகம் வீட்டில் இருக்கும்போதே ராமமூர்த்தி மாரியம்மாள் ஆகிய இருவரும் உல்லாசமாக இருந்ததாகவும் இதனை தற்செயலாக பார்த்த சண்முகம், ஆத்திரமடைந்து இருவரையும் அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டிவிட்டு போலீசிலும் சரண் அடைந்ததாகவும், இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது

Leave a Reply