25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்ள் ஜாக்டோ ஜியோ அமைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் செய்து வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் வரும் 25ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்ப்பித்துள்ளது.
ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி கோகுல் என்ற மாணவர் தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றது. இதையடுத்து வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததோடு, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரும் வரும் 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது
இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஒன்று கூடி ஆலோசித்து முடிவு செய்ய போவதாக ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறியுள்ளளனர். நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து இன்று அல்லது நாளை போராட்டம் வாபஸ் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.