கொடூரத்தை காட்டும் கொரோனா

கொரோனாவுக்கு சென்னையில் மேலும் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழப்பு என்றும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் பலி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை ரயில்வே மருத்துவமனையில் 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு என்றும், ஓமந்தூரார் மருத்துவமனையில் இருவர், கீழ்பாக்கம் மருத்துவமனையில் 4 பேர் பலி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் கடந்த சில மணி நேரங்களில் 22 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply