2023க்குள் குடிசைகள் இல்லாத தமிழகம்: துணை முதல்வர் ஓபிஎஸ்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நாகை, திருவாரூர் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் நிலையில் வரும் 2023ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தில் குடிசைகளே இல்லாத நிலையை ஏற்படுத்துவோம் என்று கூறினார்

மேலும் மக்களுக்கு அதிமுக அரசு நல்லது செய்தால் திமுகவுக்கு பொறுக்காது என்றும், மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த திமுக-காங். கூட்டணி என்ன செய்தது என மக்கள் சிந்திக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்தக் காலத்திலும் பிரியாணிக்காக திமுகவினர் சண்டை போட்டு கொள்வதாகவும், தேர்தல் பிரச்சாரத்தின்போது ஸ்டாலின் டீ தான் குடித்தார்! ஆனால் நான் டீ கடையே நடத்தியிருக்கிறேன்! என்கிட்ட முடியுமா? என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்

Leave a Reply