கொரோனா வரும் 2021 ஆம் ஆண்டு வரை தொடரும் என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் அவர்கள் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியாவில் பல பகுதிகளில் கொரோனாவின் 2ஆவது அலை வீசுகிறது என்றும், எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா கருத்து தெரிவித்துள்ளார்.

புதிதாக கொரோனா பாதிப்போர் எண்ணிக்கை வரும் மாதங்களில் இன்னும் அதிகரிக்கும் என கூறிய ரன்தீப் குலேரியா தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால் பெரும்பாலான மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது நோய்த்தொற்றை இன்னும் அதிகரிக்கவே வழிவகை செய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது

Leave a Reply