ஹர்பஜன்சிங் விளக்கம்
எனக்கு வயதாகவில்லை. இந்த ஐபிஎல் போட்டியுடன் ஓய்வுப் பெறும் முடிவை இன்னும் நான் எடுக்கவில்லை என்று இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்கு தற்போது 40 வயதாகிறது. இந்திய அணியில் கடந்த சில வருடங்களாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அவர் இன்னும் ஓய்வை அறிவிக்கவில்லை
இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியுடன் ஹர்பஜன் சிங் ஓய்வு பெற போவதாகவும், ஐபிஎல் போட்டி முடிந்தவுடன் அவர் தனது ஓய்வை அறிவிப்பார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் எனக்கு வயதாகவில்லை. இந்த ஐபிஎல் போட்டியுடன் ஓய்வுப் பெறும் முடிவை இன்னும் நான் எடுக்கவில்லை என்றும் இந்திய அணிக்காகவும், ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காகவும் இன்னும் சில வருடங்கள் விளையாடுவேன் என்றும் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.