2019-20 ஆண்டுக்கான எம்பிபிஎஸ் கலந்தாய்வு ரத்தா? மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
வெளி மாநிலத்தவர் கலந்து கொண்டதால் 2019 – 20க்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வை ரத்து செய்து, புதிய கலந்தாய்வு நடத்தக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது
இந்த நிலையில் வெளி மாநிலத்தவர் கலந்து கொண்டதால் 2019 – 20 ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வை ரத்து செய்து, புதிய கலந்தாய்வு நடத்தக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் வெளிமாநிலத்தவர்கள் தமிழகத்தில் இருப்பிட சான்றிதழ் பெறுவதில் ஏதேனும் விதிமீறல் செய்திருந்தால் மருத்துவ கல்வி இயக்கமே விசாரணை செய்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.