shadow

2019 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு

வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளதால் அக்கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இன்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2019 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களுக்கு உதவிகள் செய்திட அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

தேமுக கட்சியை இதுவரை எந்த கட்சியும் கூட்டணிக்கு அழைக்கவில்லை. அழைக்க முயற்சிப்பது போன்ற அறிகுறியும் தெரியவில்லை. அதேபோல் தேமுதிக கட்சியின் தலைமையில் ஒரு கூட்டணி அமைய இனி வாய்ப்பே இல்லை என்றும் கருதப்படுகிறது. எனவே தனித்து நின்று தனது வலிமையை நிரூபிக்க விஜயகாந்த் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply