shadow

2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை: அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

வரும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இப்போது முதலே அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

குறிப்பாக ஆளும் பாஜக அரசில் உள்ள அமைச்சர்கள், எம்பிக்களுக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என கருதப்படுகிறது

இந்த நிலையில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பாஜக தலைமைக்கு மட்டுமின்றி பாஜக தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சுஷ்மா ஸ்வராஜ் மீண்டும் டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply