2019 ஐபில்-இன் முதல் சூப்பர் ஓவர் போட்டி: டெல்லி அணி வெற்றி

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் முதல் சூப்பர் ஓவர் போட்டி நேற்று டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் நிகழ்ந்தது

கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 185 ரன்கள் எடுத்தது. ரஸல் 62 ரன்களும், தினேஷ் கார்த்திக் 50 ரன்களும் எடுத்தனர்.

186 ரன்கள் என்ற இலக்கை நோக்கிய விளையாடிய டெல்லி அணியும் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 185 ரன்களே எடுத்ததால் போட்டி ‘டை’ ஆனது

இதனையடுத்து நடந்த சூப்பர் ஓவரில் டெல்லி அணி 10 ரன்களும், கொல்கத்தா அணி 7 ரன்களும் எடுத்ததால் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து சென்னை அணியை பின்னுக்கு தள்ளி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தை டெல்லி அணி பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply