2019 ஐபிஎல் போட்டிகள் நடப்பது எங்கே? புதிய தகவல்
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும்போது ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் நடப்பது வழக்கம். பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2009ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தென்னாப்பிரிக்காவிலும் 2014ஆம் ஆண்டு அரபு நாடுகளிலும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளதால் வெளிநாட்டில் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் 2019ம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தான் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் இடம் மற்றும் தேதிகளை முடிவு செய்ய நேற்று இந்திய கிரிக்கெட் வாரிய கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது என்றும், மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் ஐ.பி.எல் போட்டிகளுக்கான விரிவான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.