shadow

2016-2017 இரயில்வே பட்ஜெட் தாக்கல். பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
railway budget
2016 – 17ஆம் ஆண்டின் ரயில்வே பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டும் சுரேஷ்பிரபுதான் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
                                                                     முக்கிய அம்சங்கள்

சேவை தரத்தை உயர்த்த நடவடிக்கை

* ரயில்வேயின் தொலைநோக்கை கனவாக்க முக்கியத்துவம்

* ரயில்வேயின் வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்துடன் தொடர்புடையது

* சவாலான சூழ்நிலையில் திட்டங்களை நிறைவேற்ற முயற்சித்து வருகிறோம்.

*  2016 – 17-ம் நிதியாண்டில் ரூ. 1.8 லட்சம் கோடி வருவாய் ஈட்ட ரயில்வே துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இது கடந்த நிதியாண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும்.

* சேவை தரத்தை உயர்த்த நடவடிக்கை

* ரயில்வே கட்டணத்தை  உயர்த்தாமல் மற்ற வழிகளில் நிதி வருவாயை உயர்த்த முயற்சி

*  இயக்க விகிதம் 92 சதவீதம் ஆக இருக்கும் என எதிர்பார்ப்பு

* பட்ஜெட்டின் முதல் இலக்கு பயணிகளின் சேவையை உயர்த்துவது

* ரயில்வேயின் பணிச்சூழலை புணரமைக்கும் திட்டம்

* கடந்த ஆண்டை விட ரயில்வேயில் முதலீட்டை இருமடங்காக்க திட்டம்

* கடந்த பட்ஜெட்டிலெ் அறிவிக்கப்பட்டவைகளில் பெரும்பாலான திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

* 139 திட்டங்கள் தற்போது செயலாக்கத்தில் உள்ளன.

* 2500 கீ.மீ நீளமுள்ள ரயில்பாதைகள் அகல ரயில்பாதைகளாக்கப்படும்.

* நாளொன்றுக்கு 7 கி.மீ ரயில்பாதை உருவாக்க இலக்கு நிர்ணயம்

* ரயில்பாதை பணிகள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்

* டெல்லி – சென்னை உள்ளிட்ட முக்கிய சரக்கு ரயில்பாதை திட்டங்களின் செயலாக்கத்திற்கு முன்னுரிமை

* 2020 க்குள் அனைத்து ரயில் கிராசிங்குகளிலும் பணியாட்கள் நியமனம்

* 2016-17 ல் 1.21 லட்சம் கோடி முதலீடு

* 2020க்குள் ரயில்வே கால அட்டவணைப்படி குறித்த நேரத்தில் ரயில்கள் இயக்க தீவிர நடவடிக்கை

* 2 ஆயிரம் கிலோ மீட்டர் பாதை மின்மயமாக மாற்ற நடவடிக்கை

* பொருளாதார வளர்ச்சிக்கு  ஊதிய உயர்வுக்குழு போன்றைவை ரயில்வே முன் உள்ள சவால்கள்

* 100 சதவீத வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்படும்

* மொத்த வருவாயில் சரக்கு கட்டணத்தின் பங்களிப்பு 60 சதவீதம்

* விஷன் 2020 கீழ் பல திட்டங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* ரயில்வே மேம்பாட்டுக்கு 124 எம்.பிக்கள் நிதியளிக்க உறுதி.

* 40 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய ரயில்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்படும்

* 2020 க்குப்பிறகு ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் இந்தியாவில் இருக்காது.

* திட்டங்கள் செயலாக்கத்திற்கு  மாநில அரசுகளுடன்  இணைந்த செயல்பாடு பெரும் மாற்றங்களை நிகழ்த்தும்

* 1780 தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு

* மூத்த குடிமக்களுக்கான கீழ்படுக்கை வசதி 50 சதவீதமாக அதிகரிப்பு

*  கூட்ட நெரிசல் உள்ள வழித்தடங்களில் முழுவதும் முன்பதிவு செய்யப்படாத அந்த்யோதயா ரயில்கள்  சாமான்ய மக்களுக்காக இயக்கப்படும்

* நடப்பு நிதியாண்டுக்குள் 17,000 பயோ – டாய்லெட் ரயில்களில் ஏற்படுத்தப்படும்..

* எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் மூலம் ரயில் பெட்டிகளை சுத்தப்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படும்

* நெரிசல் மிகுந்த பாதைகளில் இரட்டை அடுக்கு ரயில் விடப்படும்

* பார் கோடு தொழில்நுட்பத்துடன் முக்கிய ரயில் நிலையங்களில் ரயில் டிக்கெட்

* சில நீண்ட தூர ரயில்களில் கூடுதலாக 2 முதல் 4 முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்படும்.

*  நடப்பு ஆண்டில் மேலும்  100 ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி செய்து தரப்படும்

* குழந்தைகள் உணவுகள் ரயில் நிலையங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்

* வரும் நிதியாண்டில் மூத்த குடிமக்களுக்கான கீழ்படுக்கை ஒதுக்கீடு உயர்த்தப்படும்

* முன்பதிவு செய்யாத பெட்டிகளிலும் செல்போன் சார்ஜ் செய்ய வசதி ஏற்படுத்தப்படும்

* வெளிநாட்டு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு இ – டிக்கெட் வசதி ஏற்படுத்தப்படும்

* இ –  கேட்டரிங் சேவை 45ல் இருந்து 408 ரயில்நிலையங்களுக்கு விரிவுப்படுத்தப்படும்

* பல்வேறு நவீன வசதிகள் கொண்ட ஸ்மார்ட் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும்

* ரயில் பயணிகளின் பொழுது போக்குக்காக பெட்டிகளில் பண்பலை ( எப். எம் ) வானொலி வசதி ஏற்படுத்தப்படும்

* ரயில்வே போர்ட்டர்கள் கூலிக்கு பதிலாக இனி ‘சகாயக்’ என்ற பெயரில் அழைக்கப்படுவர்

* பல்வேறு நவீன வசதிகள் கொண்ட ஸ்மார்ட் ரயில் பெட்டிகள் அறிமுகம்!

* தேர்வு செய்யப்பட்ட ரயில் நிலையங்களில் கையடக்க கருவிகள் மூலம் டிக்கெட் வழங்க ஏற்பாடு!

* ரயில் பெட்டி தூய்மைக்கு எஸ்.எம்.எஸ். சேவை

* ரயில் முன்பதிவு பெட்டிகளில் பெண்களுக்கு 33% சீட் ஒதுக்கீடு

* பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை வசதியில் இணையதள டிக்கெட் புக்கிங் வசதி

* மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இரண்டு ரயில்பெட்டித் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்

ரயில் நிலைய மேம்பாட்டில் நாகை, வேளாங்கண்ணி சேர்ப்பு

* அடுத்த நிதியாண்டில் சரக்கு ரயில்களுக்காக பணிமனைகள் அமைக்கப்படும்

* சிறுவர்களுக்கான சிறப்பு உணவு பட்டியல் அறிமுகப்படுத்தப்படும்

* சில நீண்ட தூர ரயில்களில் கூடுதலாக 2 முதல் 4 முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்படும். அதில் குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதி உடன் அந்த பெட்டிகள் இருக்கும்

* ரயில்வே துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க ரூ 50 கோடி ஒதுக்கீடு

* ரயில் நிலையம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாகை, வேளாங்கண்ணி, திருப்பதி ரயில் நிலையம் சேர்ப்பு

*  பயணச் சீட்டு  முன்பதிவின் போது பயணக்காப்பீட்டுக்கான வாய்ப்பு வழங்கப்படும்

கட்டண உயர்வு இல்லை

* குறிப்பிட்ட சில ரயில்களில் சோதனை அடிப்படையில் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும்

*  ரயில் நிலையங்களில் பேட்டரி கார் அறிமுகம்!

*   139 மூலம் டிக்கெட் ரத்துச் செய்யலாம்!

* சிறுவர்களுக்கான சிறப்பு உணவுப் பட்டியல் அறிமுகம்!

* சென்னையில் ரயில் தானியங்கி மையம் அமைக்கப்படும்!

* பயணிகள் கட்டணம், சரக்குக் கட்டணம் உயர்வு இல்லை!

Leave a Reply