சென்னை மாநகராட்சி உள்பட தமிழகத்தில் முக்கிய நகரங்களில் அம்மா உணவகம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. ஏழை, எளியோர் மட்டுமின்றி வேலைக்கு செல்பவர்களும் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு பயன்பெற்று வருகின்றனர். அம்மா உணவகத்திற்கு பொதுமக்களின் ஆதரவு பெருகி வருவதால் மேலும் பல உணவகங்கள் திறக்க அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த ஆலோசனைகளை ஏற்று சென்னையில் மேலும் 200 அம்மா உணவகங்கள் திறக்கப்படுகிறது. இந்த அறிவிப்பை நேற்று சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சைதை துரைச்சாமி அறிவித்தார். படிப்படியாக அம்மா உணவகம் தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் விரிவு படுத்தப்படும் என்றும் உணவு வகைகளும் இன்னும் அதிகரிக்க ஆலோசனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.