shadow

200 விவசாயிகளின் வங்கிக்கடனை தனது சொந்த பணத்தில் செலுத்திய அமிதாப்

இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் 200 விவசாயிகளின் வங்கிக்கடனை நடிகர் அமிதாப் தனது சொந்த பணத்தில் இருந்து செலுத்தி உதவி செய்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் அமிதாப் கூறியதாவது:

விவசாயிகள் தற்கொலை தொடர்பான செய்திகளை படிக்கும்போது மிகவும் வேதனை அடைகிறேன். ரூ.15 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் என வாங்கிய கடனை கூட திருப்பி செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதை அறிந்து பல ஆண்டுகளுக்கு முன்பே வருந்தினேன். அப்போது 40 முதல் 50 விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவி அளித்தேன். தற்போது வங்கிகளிடம் இருந்து பெயர் பட்டியலை பெற்று 200 விவசாயிகள் வாங்கிய ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கான கடனை செலுத்தி இருக்கிறேன்.

மேலும் உயிர் நீத்த ராணுவ வீரர்கள் 44 பேரின் குடும் பங்களுக்கு நிதியுதவி அளித்துள்ளேன். அரசிடம் இருந்து அந்த தியாகிகளின் பெயர் பட்டியலை பெற்று அவர்களது மனைவி மற்றும் தாய், தந்தையர்களுக்கு ரூ.1 கோடியை பகிர்ந்து அளித்து உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply