shadow

20 தொகுதி இடைத்தேர்தலில் போட்டி: கமல் அறிவிப்பு

திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் போட்டி இல்லை என சமீபத்தில் அறிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தற்போது, 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் போது மக்கள் நீதி மய்யம் தேர்தலை எதிர்கொள்ளும் என்று கூறியுள்ளார்.

மேலும் இலங்கையில் ராஜபக்சே பிரதமர் ஆனதை தான் வரவேற்கவில்லை என்றும் இருப்பினும் இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுள்ள ராஜபக்சே தமிழ் மக்களிடம் முன்பு போல் நடந்து கொள்ள மாட்டார் என நம்புவோம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் போட்டி என்ற அறிவிப்பை அடுத்து விரைவில் கட்சி ஆரம்பிக்கவுள்ள ரஜினியும் இந்த இடைத்தேர்தலை சந்திப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது

 

Leave a Reply